தொல்லியல் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு.

 தொல்லியல் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு.


சென்னை:தொல்லியல் பயிற்சி பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசின், தொல்லியல் துறை, 'தொல்லியல் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில், சென்னை, தர்மபுரி, கோவை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலியில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், தலா, ஐந்து நாட்கள், பயிற்சி பட்டறை நடத்த திட்டமிட்டுள்ளது.இப்பயிற்சியில், தொல்லியல், அகழாய்வு, கல்வெட்டு, நாணயவியல், வரலாற்று சின்னங்கள் புனரமைப்பு, ஆவணப்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல் போன்ற தலைப்புகளில், தொல்லியல் அறிஞர்கள் பயிற்சி அளிப்பர்; கள ஆய்வு பயிற்சியும் அளிக்கப்படும்.

விருப்பம் உள்ள, தொல்லியல் ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தங்கள் பெயர், முகவரி, கல்வித் தகுதி ஆகிய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை, 'கமிஷனர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை - 8' என்ற முகவரிக்கு, தபாலில் அனுப்பவும். அல்லது tnsdaworkshopgmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பவும். https://www.tnarch.gov.in/ தொல்லியல் துறையின் இணையதளம் வழியாகவும், பதிவு செய்து கொள்ளலாம்.பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பங்கள், வரும், 30ம் தேதி மாலை, 5:00 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

Comments

  1. Msc computer science படித்த நான் இந்த படிப்பை படிக்க விரும்புகிறேன் முடியுமா​

    ReplyDelete
  2. இந்த ஆண்டு எப்போது நடைபெறும். சேர்ந்து பயில்வது எப்படி விவரம் அனுப்பவும்

    ReplyDelete
  3. பிகாம் படித்த நான் இப்படிப்பை படிக்க முடியுமா ஐயா

    ReplyDelete
  4. 12th படித்த நான் விண்ணப்பிக்கலாமா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அகழாய்வு

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்